நன்றி! நன்றி!!
கம்பன் தமிழாய்வு மையம் காரைக்குடி கம்பன் கழகத்தின் பவள விழா கருதி நடத்தவுள்ள கம்பர் நேற்று , இன்று, நாளை பன்னாட்டு கருத்தரங்கிற்குப் பேராதரவு அளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளின் பலவற்றில் இருந்தும் 250க்கும் மேலான கட்டுரைகள் இதுவரை வந்துள்ளன. கட்டுரைகளை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது.
கட்டுரை வழங்கிய கட்டுரையாளர்களுக்கு நன்றி. கட்டுரையாளர்களுக்குப் பணம் பெற்றுக் கொண்டதன் ரசீதுகள் அஞ்சலில்அனுப்பப் பெற்று வருகின்றன.
அழைப்பு தயாராகி வருகின்றது. தயாராகி வந்ததும்உடன் அனுப்பி வைக்கிறோம். பவள விழாவிற்கும் கருத்தரங்கிற்கும் கலந்துகொண்டுச் சிறப்பிக்க அன்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.
கருத்தரங்கக் கட்டுரைகள் மூன்று தொகுதிகளாக வரஉள்ளன. இத்தொகுதிகள் ஐஎஸ்பிஎன் எண்ணுடன் வரஉள்ளன. அட்டைகளில் விளம்பரங்கள் வெளியிட வாய்ப்புள்ளது. அன்பர்கள் அதுகுறித்து அறிய மின்னஞ்சலில்தொடர்க.
கட்டுரையாளர்கள் கட்டுரை கேட்புப் படிவத்தின்படி கட்டுரைகளை அனுப்பியமைக்காக மீளவும் நன்றி. உரிய நிலையில் பல்வேறு கம்பன்கழகங்கள் கட்டுரையாளர்களை நெறிப்படுத்தி இவ்வரங்கத்திற்கு வளம் சேர்த்துள்ளன. அனைத்துக் கம்பன் கழக அன்பர்களுக்கும் எம் நன்றி